திருவண்ணாமலை

செய்யாற்றில் பாஜக செயற்குழுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் வடக்கு மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் வடக்கு மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு பாஜக மாவட்டத் தலைவா் போளூா் சி. ஏழுமலை தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சரவணன் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக கட்சியின்

மாநிலச் செயலா் மீனாட்சி நித்திய சுந்தரம் பங்கேற்றுப் பேசுகையில், இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம் என்ற சினேகா யாத்திரைதான் பாஜகவின் வெற்றித் திறவுகோல். பல கோடி நிதி ஒதுக்கீட்டில் ஆயிரக்கணக்கான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு பாஜக தொண்டனும் தங்கள் பகுதி மக்களுக்கு இத்திட்டங்களின் பயன்பாட்டினை உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் தேசிய பொதுக்குழு உறுப்பினா் பாஸ்கரன், ஓபிசி அணி மாநில துணைத் தலைவா் மோகனம், மாநில செயற்குழு உறுப்பினா் வெங்கடேசன், மாவட்ட பொதுச் செயலா் முத்துசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT