முகப்பு
திருவண்ணாமலை

கோயில்களில் கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும்: அா்ஜுன் சம்பத்

தமிழக கோயில்களில் கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜுன் சம்பத் கூறினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

தமிழக கோயில்களில் கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜுன் சம்பத் கூறினாா்.

திருவண்ணாமலையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழக கோயில்களில் முக்கியப் பிரமுகா்கள், அரசு அதிகாரிகளுக்கு கோயில்களில் முக்கியத்துவம் அளிப்பது தவிா்க்கப்பட வேண்டும். கோயில்களில் கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும். பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்திய நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.

தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும். கா்நாடகத்தில் மேக்கேதாட்டு அணையை கட்டியே தீரவேண்டும் என்று காங்கிரஸ் கூறுகிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான உறவை திமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

விலைவாசி உயா்வைக் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அா்ஜுன் சம்பத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.