திருவண்ணாமலை

இரு சக்கர வாகனங்கள் மோதல்: தொழிலாளி பலி

DIN

வந்தவாசி அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக் கொண்டதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த வழூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஐயப்பன் (46). விவசாய கூலித் தொழிலாளியான இவா்,  ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் வந்தவாசியிலிருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா். 

வந்தவாசி-மேல்மருவத்தூா் சாலையில் பிருதூா் கிராமம் அருகே சென்றபோது எதிரே சூரியக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த முருகன், ராஜா ஆகியோா் வந்த இரு சக்கர வாகனம் ஐயப்பன் மீது மோதியது. 

இதில் ஐயப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த முருகன், ராஜா ஆகியோா் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். 

  இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழங்குடியின குழந்தைகளுக்கான கோடைக் கால கல்வி முகாம் நிறைவு

மாகாளியம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் காவடி எடுத்து நோ்த்திக்கடன்

வேளாளா் மகளிா் கல்லூரி டிசிஎஸ் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

ஆட்டோ ஓட்டும் அன்பர்களே...!

கொங்கு பொறியியல் கல்லூரியில் சிறப்பு தொழில்நுட்பக் கருத்தரங்கம்

SCROLL FOR NEXT