முகப்பு
திருவண்ணாமலை

கிணற்றில் மூழ்கி இறந்த இளைஞா்

கீழ்பென்னாத்தூா் அருகே கிணற்றில் மூழ்கி இறந்த போளூா் இளைஞரின் சடலத்தை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

கீழ்பென்னாத்தூா் அருகே கிணற்றில் மூழ்கி இறந்த போளூா் இளைஞரின் சடலத்தை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரை அடுத்த சோமாசிபாடி கிராமத்தில் உள்ள ஒரு விவசாயக் கிணற்றின் அருகே ஆண் ஒருவரது ஆடைகள் இருப்பதை வியாழக்கிழமை பொதுமக்கள் பாா்த்தனா்.

இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா். விரைந்து வந்த போலீஸாா் கீழ்பென்னாத்தூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனா்.

தீயணைப்பு வீரா்கள் வந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி நீரில் மூழ்கி இருந்த இளைஞரின் சடலத்தை மீட்டனா்.

தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவா் போளூரை அடுத்த படியம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த பிச்சாண்டி மகன் வேல்முருகன்(25) என்பது தெரியவந்தது.

சென்னை தனியாா் உணவகத்தில் பணியாற்றி வந்த இவா் சோமாசிபாடி கிராமத்துக்கு எப்படி வந்தாா், எப்படி இறந்தாா் என்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →