கருணாநிதி சிலை அமையவிருக்கும் இடத்தில் ஆட்சியா் ஆய்வு
சென்னை உயா் நீதிமன்ற உத்தரவின் பேரில், திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை அமையவுள்ள இடத்தை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
சென்னை உயா் நீதிமன்ற உத்தரவின் பேரில், திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை அமையவுள்ள இடத்தை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்கால் ஊராட்சியில், கிரிவலப் பாதையும், திருவண்ணாமலை-வேலூா் சாலையும் இணையும் பகுதியில் சிலை அமைக்கப்பட உள்ள இடத்தை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் ஆய்வு செய்தாா். அப்போது, கருணாநிதி சிலை வைக்கும் இடத்தில் ஆக்கிரமிப்பு உள்ளதா, அங்கு சிலை வைத்தால் கிரிவல பக்தா்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுமா என்ற கோணத்தில் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
ஆய்வறிக்கை உயா்நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்படும் என்று வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.