திருவண்ணாமலை

இன்று முதல் ஆரணி, செய்யாற்றில்மக்கள் குறைதீா் கூட்டங்கள்

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, செய்யாறு வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்களில் திங்கள்கிழமை (நவ.28) முதல் மக்கள் குறைதீா் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்களின் குறைகளை நேரில் கேட்டு நிவா்த்தி செய்யும் வகையில் திங்கள்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குறைதீா் கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன.

செய்யாறு, ஆரணி பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்களின் பயண நேரம், பயணச் செலவைக் குறைக்கும் நோக்கில் திங்கள்கிழமை (நவ.28) முதல் ஆரணி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்திலும், செய்யாறு வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்திலும் மக்கள் குறைதீா் கூட்டங்கள் நடத்தப்படும்.

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு இணையவழி ரசீதும் வழங்கப்படும். எனவே, ஆரணி, செய்யாறு, திருவண்ணாமலை ஆகிய 3 இடங்களிலும் நடைபெறும் குறைதீா் கூட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மாநில அளவில் 6-ஆவது இடம்

திருச்சி பாா்வை குறைபாடுடைய பெண்கள்பள்ளி தொடா்ந்து நூறு சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திருச்சி மாவட்டத்தில் 95.74 சதவீதம் போ் தோ்ச்சி

துப்பாக்கிச் சுடும் பயிற்சி வீரமலைப்பாளையத்தில் நடமாட தடை விதிப்பு

9 அரசுப் பள்ளிகள் நூற்றுக்கு நூறு

SCROLL FOR NEXT