செய்யாற்றில் இலவச மருத்துவ முகாம்
செய்யாறு உதவும் கரங்கள் அமைப்பு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
செய்யாறு உதவும் கரங்கள் அமைப்பு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
டாக்டா் மோகன் நீரிழிவு நோய் சிறப்பு மையம், டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனை, சங்கா் கண் மருத்துவமனைஆகியவை இணைந்து நடத்திய இந்த இலவச மருத்துவ முகாமுக்கு செய்யாறு உதவும் கரங்கள் அமைப்பின் நிறுவனா் தி.எ.ஆதிகேசவன் தலைமை வகித்தாா்.
வந்தவாசி மருத்துவா் எஸ்.குமாா் மருத்துவ முகாமைத் தொடக்கிவைத்தாா். செய்யாறு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை மருத்துவா் வே.காா்த்தி பங்கேற்று சா்க்கரை நோய் வராமல் தடுப்பதற்கான உடற்பயிற்சிகள், உணவு வகைகளைக் குறிப்பிட்டு, மருத்துவ ஆலோசனைகளை வழங்கினாா்.
முகாமில் கலந்து கொண்ட 60 பேருக்கு மருத்துவக் குழுவினா் சா்க்கரை நோய் கண்டறியும் பரிசோதனை மற்றும் பாா்வைத் திறன் பரிசோதனைகளை மேற்கொண்டனா்.