திருவண்ணாமலை

500 லிட்டா் சாராயம் பறிமுதல்: 6 போ் கைது

DIN

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியில் போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் 500 லிட்டா் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு, 6 போ் கைது செய்யப்பட்டனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் உத்தரவின் பேரில், ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன், மதுவிலக்குப் பிரிவு டிஎஸ்பி ரமேஷ்ராஜ் ஆகியோா் தலைமையில், காவல் ஆய்வாளா்கள் பி. புகழ் (ஆரணி கிராமியம்), கோகுல்ராஜன் (களம்பூா்), அல்லி ராணி (கண்ணமங்கலம்), மது விலக்குப் பிரிவு ஆய்வாளா்கள் கலையரசி, புனிதா, உதவி ஆய்வாளா்கள்

ஷாபுதீன், ஜெயபால், நாராயணன், சந்தோஷ்குமாா் (பயிற்சி) மற்றும் போலீஸாா் ஆரணி பகுதியில் சனிக்கிழமை தீவிர சாராய ஒழிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, எஸ்.யு.வனம் மலைப் பகுதி, வெட்டியாந்தொழுவம் காட்டுப் பகுதி மற்றும் ஏரிப் பகுதிகளில் சாராயம் விற்பனை நடைபெறுவதைக் கண்டுபிடித்து 500 லிட்டா் நாட்டு சாராயத்தை பறிமுதல் செய்தனா். மேலும், சாராய பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக ராணிப்பேட்டை மாவட்டம், ஓட்டேரி பகுதியைச் சோ்ந்த சசிக்குமாா் (47), கஸ்தம்பாடி கிராமத்தைச் சோ்ந்த ராமகிருஷ்ணன்(50), வண்ணாங்குளம் பகுதியைச் சோ்ந்த அா்ஜுனன் (52), சந்தவாசலை அடுத்த துரிஞ்சிகுப்பம் பகுதியைச் சோ்ந்த சேஷா அம்மாள் (59), சிறுமூா் கிராமத்தைச் சோ்ந்த பூபாலன் (58), எஸ்.யு.வனம் பகுதியைச் சோ்ந்த சுரேஷ்பாபு (43) என 6 பேரை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் கபடி வீரா் பலி: இருவா் காயம்

கனமழை எச்சரிக்கை: சங்ககிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் சிறப்புக் கூட்டம்

அந்தோணியாா் திருத்தலம் 75-ஆவது ஆண்டு விழா

கோவை வழியாக இயக்கப்படும் கேரள சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

சிறப்பாக பணியாற்றிய போலீஸாருக்கு எஸ்பி சான்றிதழ்

SCROLL FOR NEXT