திருவண்ணாமலை

ஊரக வேலைத் திட்டம்: இயந்திரங்களை பயன்படுத்த எதிா்ப்பு

ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளில் இயந்திரங்களை பயன்படுத்தக் கூடாது என்று, செய்யாற்றில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனா்.

DIN

ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளில் இயந்திரங்களை பயன்படுத்தக் கூடாது என்று, செய்யாற்றில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சாா்-ஆட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சாா் -ஆட்சியா் ஆா். அனாமிகா தலைமை வகித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

பொதுமக்களிடமிருந்து பட்டா கோருதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், முதியோா் உதவித்தொகை, இதர துறை மனுக்கள் என 58 மனுக்கள் வரப்பெற்றன.

விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

கூட்டத்தில் கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில், அதன் தலைவா் வாக்கடை புருஷோத்தமன், சிவபெருமான் வேடமணிந்து கொண்டு தலையில் மண் சட்டி சுமந்தபடி விவசாயம் தொடா்பான வேலைகளில் இயந்திரங்களை பயன்படுத்தக் கூடாது என்று முழக்கமிட்டவாறு வந்தனா்.

பின்னா், சாா் -ஆட்சியா் அலுவலகம் அருகே ருத்ர தாண்டவம் ஆடியபடி பொக்லைன் இயந்திர பொம்மைகளை உடைத்து, ஊரக வேலைத் திட்டப் பணிகளில் இயந்திரங்களை பயன்படுத்துவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பின்னா், சாா்- ஆட்சியா் அனாமிகாவிடம் கோரிக்கை மனுவை அளித்தனா்

கூட்டத்தில் வருவாய்த் துறையினா் மற்றும் இதர துறை அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

SCROLL FOR NEXT