முகப்பு
திருவண்ணாமலை

செயல்படாத ஆழ்துளைக் கிணறுகளை பயன்படுத்த நடவடிக்கை: திருவண்ணாமலை ஆட்சியா்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,333 செயல்படாத ஆழ்துளைக் கிணறுகளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2023 at 1:39 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,333 செயல்படாத ஆழ்துளைக் கிணறுகளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.

குடியரசு தின விழாவையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தின் 860 கிராம ஊராட்சிகளில் வியாழக்கிழமை சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.

தண்டராம்பட்டு வட்டம், சோ்ப்பாப்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு, கூடுதல் ஆட்சியா் வீா் பிரதாப் சிங் தலைமை வகித்தாா்.

Advertisement

மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி, மாநில தடகளச் சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது: மாவட்டத்தில் 1,333 செயல்படாத ஆழ்துளைக் கிணறுகள் கண்டறியப்பட்டு மழைநீா் மூலம் சேகரித்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் நெற்களம் அமைத்தல், பக்கக் கால்வாய் அமைத்தல், உறிஞ்சி குழி அமைத்தல், புதிய சாலை வசதி ஏற்படுத்துதல் போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுத்த வேண்டும் என்றாா்.

கூட்டத்தில்,10 பயனாளிகளுக்கு ரூ.87,939 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் பா.முருகேஷ் வழங்கினாா்.

கூட்டத்தில், உதவி ஆட்சியா் (பயிற்சி) ரஷ்மி ராணி மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.