கர கதையிலேயே நாயகத் தன்மை உண்டு: தனுஷ்
கர கதை குறித்து தனுஷ்...
நடிகர் தனுஷ் கர திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கர திரைப்படம் வருகிற ஏப். 30 ஆம் தேதி வெளியாகிறது. போர் தொழில் படம் மூலம் கவனிக்கப்பட்ட இயக்குநர் விக்னேஷ் ராஜா இப்படத்தை இயக்கியுள்ளார்.
நாயகியாக மமிதா பைஜுவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் சுராஜ், ஜெயராம், கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியாகி கவனம் ஈர்த்திருந்தது.
Advertisement
Advertisement
1990-களில் ராமநாதபுரத்தில் நடந்த சம்பவம் ஒன்றை மையமாக வைத்து இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளனர்.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய இயக்குநர் விக்னேஷ் ராஜா, “இப்படத்தின் கதையை எழுத 8 மாதங்கள் எடுத்துக்கொண்டோம். முழுமையாக எழுதி முடித்துவிட்டே தயாரிப்பு நிறுவனத்திடம் செல்ல வேண்டும் என்பதுதான் என் பாணி. முன்பணம் வாங்கியபின் அவரசமாக கதையை எழுதுவது துப்பாக்கியைத் தலையில் வைத்து எழுதச் சொல்வது மாதிரி.
இக்கதையை முடித்தபின் நடிகர் தனுஷிடம் சொன்னபோதே அவருக்குப் பிடித்துவிட்டது. உடனே, அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது. நான் அவரிடம் ஏதாவது நாயக காட்சிகளைச் சேர்க்க வேண்டுமா? எனக் கேட்டேன். அதற்கு அவர், ’இக்கதையிலேயே நாயகத்தன்மை இருக்கிறது. இதுவே போதும்’ என்றார்.” எனத் தெரிவித்துள்ளார்.
There is heroism inherent in the kara story itself, says Dhanush.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.