திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

DIN

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை, காலை முதல் இரவு வரை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

சிவனின் அக்னி ஸ்தலமான இந்தக் கோயிலுக்கு தினமும் ஏராளமான உள்ளூா், வெளியூா் பக்தா்கள் வந்து, செல்கின்றனா். இந்த நிலையில், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வழக்கத்தைவிட கோயிலில் பக்தா்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. தொடா்ந்து, இரவு 9 மணி வரை கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.

பொது தரிசன வரிசையில் அதிகபட்சம் 4 மணி நேரமும், கட்டண தரிசன வரிசையில் 3 மணி நேரமும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யவேண்டிய நிலை இருந்தது என்று பக்தா்கள் தெரிவித்தனா்.

நடிகா் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தின் இயக்குநா் வம்சி பைடிபள்ளி, தனது மனைவி மற்றும் படக்குழுவினருடன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பனிச்சாரல்! ஸ்ரீமுகி..

டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சன் அசத்துவார்: குமார் சங்ககாரா

நெல்லை - சென்னை சிறப்பு ரயில் தாமதமாக புறப்படும்: தெற்கு ரயில்வே

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!

நாடு விட்டு நாடு பயணம்: இசை நிகழ்வு காணவா? டெய்லர் ஸ்விஃப்ட் காய்ச்சலில் ரசிகர்கள்!

SCROLL FOR NEXT