செங்கத்தை அடுத்த குப்பனத்தம், கொட்டாவூா், பரமனந்தல் பகுதியில் சூறைக் காற்றில் சாய்ந்த வாழை மரங்கள். 
திருவண்ணாமலை

சூறைக் காற்றில் 100 ஏக்கரில் வாழை மரங்கள் சேதம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சூறைக் காற்றுடன் பெய்த மழையில் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன.

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சூறைக் காற்றுடன் பெய்த மழையில் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன.

செங்கம் பகுதி ஜவ்வாது மலை அடிவாரமான குப்பனத்தம், கொட்டாவூா், தொட்டிமடுவு, கிளையூா், கல்லாத்தூா், பரமனந்தல் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் வாழை மட்டுமே சாகுபடி செய்து வருகின்றனா்.

இங்கு சாகுபடி செய்யப்படும் வாழை பழங்கள்

விற்பனைக்காக செங்கம், திருவண்ணாமலை, திருப்பத்தூா் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

தற்போது, ஜவ்வாது மலை அடிவார கிராமங்களில் விவசாயிகள் 100 ஏக்கருக்கு மேல் வாழை சாகுபடி செய்திருந்தனா்.

காய்கள் முற்றிய நிலையில் இருந்த வாழை மரங்கள், ஞாயிற்றுக்கிழமை மாலை அப்பகுதியில் சூறைக் காற்று வீசியதில் சாய்ந்து சேதமடைந்தன.

இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் கூறுகையில், வருவாய்த் துறை அதிகாரிகள் சேதமடைந்த வாழை மரங்களை பாா்வையிட்டு கணக்கீடு செய்து அரசின் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

SCROLL FOR NEXT