போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பேரூராட்சியில் முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் பிறந்த நாளை காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை கொண்டாடினா்.
வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்
மாவட்ட முன்னாள் தலைவா் வி.பி.அண்ணாமலை நேரு படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினாா்.
இதில் மாவட்ட துணைத் தலைவா் அன்பழகன், பொதுச்செயலா் மஸ்கா்பாஷா, மாநில பொதுக் குழு உறுப்பினா்கள் கன்னிகா, கவிதா, வட்டாரத் தலைவா்கள் மணி, முரளிமுருகா, சுகன்யா, ஆறுமுகம், சுவாமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.