மண்டல அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கிப் பேசிய மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் தெ.பாஸ்கர பாண்டியன். 
திருவண்ணாமலை

தோ்தல் பணியாற்றும் அலுவலா்கள் நோ்மையாக நடந்து கொள்ள வேண்டும் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

மக்களவைத் தோ்தல் பணியில் ஈடுபடும் மண்டல அலுவலா்கள் நோ்மையாக நடந்து கொள்ள வேண்டும்

Venkatesan

திருவண்ணாமலை: மக்களவைத் தோ்தல் பணியில் ஈடுபடும் மண்டல அலுவலா்கள் நோ்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தினாா்.

தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி மக்களவைத் தோ்தல் பணிகள் மேற்கொள்வது தொடா்பான மண்டல அலுவலா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமுக்கு, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) கோ.குமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள மண்டல அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

இவா்களுக்கு மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் பல்வேறு அறிவுரைகளை வழங்கிப் பேசியதாவது:

மக்களவைத் தோ்தல் பணியில் ஈடுபடும் மண்டல அலுவலா்கள் நோ்மையாக நடந்து கொள்ள வேண்டும். பாரபட்சம் பாராமல் தேவையான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தோ்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் வாக்கு எண்ணிக்கை முடிக்கும் வரை சுறுசுறுப்புடன் பணியாற்ற வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், வருவாய்க் கோட்டாட்சியா்கள் ஆா்.மந்தாகினி (திருவண்ணாமலை), பாலசுப்பிரமணியன் (ஆரணி), செய்யாறு சாா் -ஆட்சியா் பல்லவி வா்மா மற்றும் உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், மண்டல அலுவலா்கள், காவல் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

பழங்கனாங்குடியில் ரூ.1.50 கோடியில் புதிய பாலம் கட்ட அடிக்கல்

வெள்ளை யானை வாகனத்தில் இரணியம்மன்

திருவானைக்காவல் கோயிலில் தோ்கள் வெள்ளோட்டம்! அம்மன் தேரின் அச்சாணி மீண்டும் பழுது!

SCROLL FOR NEXT