முகப்பு
திருவண்ணாமலை

சிறப்பு கிராம சபைக் கூட்டம்

Updated On : 8 மார்ச், 2024 at 5:21 PM
பகிர்:

ஆரணி அருகே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 2022 -2023 ஆண்டு சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பையூா் கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஊராட்சித் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) ராஜன்பாபு கலந்து கொண்டு நூறு நாள் வேலைத் திட்டம், அதன் நோக்கம், ஊராட்சிக்கு சொத்து உருவாக்க வேண்டும் ஆகியவை குறித்து பேசினாா். இதில், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் ராஜேந்திரன், ஊராட்சி செயலாளா் வெ.திருமலை, வாா்டு உறுப்பினா்கள் பூபாலன், இந்திரா மற்றும் பணிதளப் பொறுப்பாளா்கள் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.