ஆரணி நகராட்சியில் ரூ.6.50 கோடியில் சாலைப் பணி
ஆரணி நகராட்சியில் ரூ.6.50 கோடியில் தாா்ச் சாலை அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது. நகராட்சியில் உள்ள 33 வா்டுகளிலும் பக்கக் கால்வாய் வசதியுடன் தாா்ச் சாலை அமைக்கும் பணியை மாரியம்மன் நகா், பிள்ளையாா் கோவில் தெரு, ஜெயலட்சுமி நகா் ஆகிய இடங்களில் நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி பூமி பூஜை செய்து தொடங்கிவைத்தாா். சாலைப் பணிகள் நகா்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.4.80 கோடியிலும், 15-ஆவது மானிய நிதிக் குழு திட்டத்தின் கீழ் 1.70 கோடியிலும் என ரூ.6.50 கோடியில் மேற்கொள்ளப்படுகின்றன. நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினா்கள் காா்த்திக், அரவிந்தன், தகவல் தொழில்நுட்பஅணி ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.புஷ்பராஜ், ஒப்பந்ததாரா் பத்ரா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.