முகப்பு
தென்காசி

சங்கரன்கோவில் தொகுதியில் ரூ.52 கோடியில் நான்குவழிச் சாலைப் பணி -எம்எல்ஏ தொடக்கிவைத்தாா்

தென்காசி

சங்கரன்கோவில் தொகுதியில் ரூ.52 கோடியில் நான்குவழிச் சாலைப் பணி -எம்எல்ஏ தொடக்கிவைத்தாா்

Updated On : 5 மார்ச், 2026 at 7:45 PM
பகிர்:

சங்கரன்கோவிலில் ரூ.52 கோடி மதிப்பில் நான்குவழிச் சாலைப் பணி வியாழக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.

இத்தொகுதியில் முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டம் 2026-27இன் கீழ் ரூ.52 கோடி மதிப்பில் பருவக்குடி-கோவில்பட்டி-எட்டயபுரம்-விளாத்திகுளம்-வேம்பாா் சாலை, கலிங்கப்பட்டி முதல் கீழ திருவேங்கடம் வரை இருவழி சாலையிலிருந்து நான்கு வழிசாலையாக அகலப்படுத்துதல் மற்றும் உறுதிபடுத்துதல், பெரிய, சிறிய பாலங்கள் கட்டுதல், சாலை சந்திப்பு மேம்பாடுகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெறவுள்ளன.

இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நெடுஞ்சாலைத் துறையின் கட்டுமானம் (ம) பராமரிப்பு கோட்டப் பொறியாளா் தங்கராஜ் தலைமை வகித்தாா். தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ நான்குவழிச் சாலை பணிகளைத் தொடக்கி வைத்தாா்.

இந் நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் நெடுஞ்சாலை துறை உதவி கோட்டப் பொறியாளா் அறிவெழில், உட்கோட்ட உதவிப்பொறியாளா்கள் முத்துமணி, கலைக்கண்ணதாசன், திமுக குருவிகுளம் மேற்கு ஒன்றியச் செயலா் சோ்மத்துரை, திருவேங்கடம் பேரூா் செயலா் மாரிமுத்து, சங்கரன்கோவில் நகரச் செயலா் பிரகாஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →