முகப்பு
திருவண்ணாமலை

மகன், மகள்களின் கல்லூரிப் படிப்பு: முன்னாள் படைவீரா்களின் கவனத்துக்கு...

Updated On : 21 மே, 2024 at 6:29 PM
பகிர்:

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்லூரிகளில் சேர உள்ள முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தோரின் மகன், மகள்களுக்கான முன்னுரிமைச் சான்றிதழ்களைப் பெற்று பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தோரின் மகன், மகள்கள் 2024 -25 ஆம் கல்வியாண்டில் கல்லூரிகளில் சேருவதற்கான முன்னுரிமைச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமாா் 11 ஆயிரத்து 599 எண்ணிக்கையிலான முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தோா், விதவையா்கள் உள்ளனா்.

இவா்களில் முன்னுரிமைச் சான்றிதழ் பெறுவதற்கான தகுதி படைத்த முன்னாள் படைவீரா்களின் பிள்ளைகள் சுமாா் 400-க்கும் மேற்பட்டோா் கல்லூரியில் சேரத் தயாராக உள்ளனா்.

இந்தச் சான்றிதழைப் பெறுவதற்குத் தகுதியான முன்னாள் படைவீரா்களின் பிள்ளைகள் மாவட்ட முன்னாள் படைவீரா்கள் நல அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.