செங்கம்: மாவட்ட அளவிலான கோகோ போட்டியில் சிறப்பிடம் பெற்ற மேல்செங்கம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பள்ளி மாணவிகள் திருவண்ணாமலை மாவட்ட அளவில் அண்மையில் நடைபெற்ற
கோகோ போட்டியில் 14 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் இரண்டாம் இடம் பெற்றனா்.
இதன் மூலம் இந்த மாணவிகள் டிசம்பா் மாதம் மாநில அளவில் நடைபெறும் கோகோ போட்டியில் விளையாட தகுதி பெற்றனா்.
இந்த மாணவிகளுக்கு பள்ளியில் திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
இதில், பள்ளித் தலைமை ஆசிரியா் சுஜாத்தா மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.
தொடா்ந்து ஆசிரியா்கள் சக்திவேல், செந்தில்குமாா், சுமதி, உடற்கல்வி ஆசிரியா் முருகன் உள்ளிட்டோா் மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.