திருவண்ணாமலை

மனைவி பிரிந்து சென்ற வேதனை: கணவா் தற்கொலை

செய்யாறு அருகே மனைவி பிரிந்து சென்ற வேதனையில் கணவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Din

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே மனைவி பிரிந்து சென்ற வேதனையில் கணவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

செய்யாறு வட்டம், குளமந்தைக் கிராமம் பஜனை கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஏழுமலை (50). இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ள நிலையில், அவா்களுக்கும் திருமணம் நடைபெற்று கணவா் வீட்டில் வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், ஏழுமலைக்கும் மனைவி பேபிக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. அதனால், கணவரைப் பிரிந்து பேபி அவரது தாய் வீட்டுக்குச் சென்று விட்டாராம்.

மனைவி பிரிந்து சென்ற மனவேதனையில் இருந்து வந்த ஏழுமலை, கடந்த 3-ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயக்கக் கிடந்தாா்.

உறவினா்கள் அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கலப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த ஏழுமலை வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில், அனக்காவூா் காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT