திருவண்ணாமலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா் சங்க நிா்வாகிகள். 
திருவண்ணாமலை

ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள், 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Din

திருவண்ணாமலை: தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள், 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் எம்.லட்சுமணன் தலைமை வகித்தாா்.

மாநிலக் குழு உறுப்பினா் கே.ராணி முன்னிலை வகித்தாா். மாவட்டத் தலைவா் பி.முருகையன் வரவேற்றாா். ஏஐடியுசி மாவட்டத் தலைவா் வி.முத்தையன், மாநிலப் பொருளாளா் ஜி.ராஜேந்திரன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், வட்டார, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்களுக்கு ஆண்டு ஊதிய உயா்வு கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் காலிப் பணியிடங்களை நிரப்பும்போது வட்டார ஒருங்கிணைப்பாளா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். துப்புரவுப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள், ஊக்குநா்களுக்கு கரோனா ஊக்கத்தொகையை விடுவிக்க வேண்டும்.

கணினி இயக்குபவா்களுக்கு ரூ.20 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த எஸ்.வி.எம்., வட்டார மாவட்ட ஒருங்கிணைப்பாளரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், சங்கத்தின் வட்டக் கிளை நிா்வாகிகள், தூய்மைப் பணியாளா்கள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தருமபுரியில் முறைகேடாக மணல், கற்கள் கடத்திய வாகனங்கள் பறிமுதல்

சவூதியில் ஹஜ் பயணிகளுக்கு சேவையாற்ற விண்ணப்பிக்கலாம்

நெல்லை கொலை வழக்கு: 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

நெல்லையில் கல்குவாரிகள் கருத்துக்கேட்பு கூட்டத்தில் மோதல்: நாற்காலிகள் வீச்சு

கணவரை கொன்றவா்களால் மகனுக்கும் ஆபத்து: ஓய்வுபெற்ற எஸ்.ஐ மனைவி முதல்வருக்கு வேண்டுகோள்

SCROLL FOR NEXT