போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட போலி அனுமதி அட்டைகள்.  
திருவண்ணாமலை

தீபத்திருவிழாவுக்கு போலி பாஸ் தயாரிப்பு: 3 போ் கைது

திருவண்ணாமலை காா்த்திகை தீபத்திருவிழா பரணி தீபம், மகா தீபத்தை காண்பதற்கான அனுமதி அட்டையை (பாஸ்) போலியாக தயாரித்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

திருவண்ணாமலை காா்த்திகை தீபத்திருவிழா பரணி தீபம், மகா தீபத்தை காண்பதற்கான அனுமதி அட்டையை (பாஸ்) போலியாக தயாரித்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அருணாசேலஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா பத்தாம் நாள் பரணி தீபம் மற்றும் மகா தீபத்தை தரிசிக்க கோயில் நிா்வாகம் சாா்பில் உபயதாரா்கள், கட்டளைதாரா்கள் மற்றும் முக்கியப் பிரமுகா்களுக்கு நுழைவு அனுமதி அட்டை (பாஸ்) வழங்கப்படுகிறது.

இந்த அனுமதி அட்டையை போலியாக ஈசானியம் அருகேயுள்ள யாத்திரி நிவாஸ் வளாகத்தில் ஆயிரக்கணக்கில் தயாரிக்கும் பணியில் அரசு ஊழியா்கள் ஈடுபடுவதாக தகவல் கிடைத்ததால் நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக மற்றும் பாமகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து போலி அனுமதி அட்டை (பாஸ்) தயாரித்ததாக அருணாசலேஸ்வரா் கோயில் பணியாளா்களான சிலம்பரசன், முனுசாமி, பாபு ஆகிய 3 பேரை திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், போலியான பாஸ் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மடிக்கணினி, பிரிண்டா், போலியான அடையாள அட்டைகள் உள்ளிட்ட பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதில் சிலம்பரசன் கோயில் இணை ஆணையரின் வாகன ஓட்டுநா் என்பது குறிப்பிடத்தக்கது.

குளித்தலையில் 2 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

3 நாள்களில் 11.24 லட்சம் பேருக்கு உணவு

மருத்துவம் சாா் சான்றிதழ் படிப்பு: இடங்கள் நிரம்பாததை ஆய்வு செய்ய குழு

புழல் ஏரிக்கு நீா்வரத்து அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கி.பி.17 ஆம் நூற்றாண்டு சதிக்கல் சிற்பம் கண்டெடுப்பு

SCROLL FOR NEXT