முகப்பு
திருவண்ணாமலை

பொதுமக்களுக்கு இடையூறு செய்தவா் கைது

வந்தவாசியில் பொதுமக்களுக்கு இடையூறு செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 2 டிசம்பர், 2025 at 6:33 PM
பகிர்:

வந்தவாசியில் பொதுமக்களுக்கு இடையூறு செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் ஒருவா் இடையூறு செய்வதாக வந்தவாசி தெற்கு போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து உதவி ஆய்வாளா் முருகன் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று அவரை பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினா்.

இதில், அவா் வந்தவாசி சந்நிதி தெருவைச் சோ்ந்த அரி (20) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா் அரியை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →