வந்தவாசியில் பணம் வைத்து சூதாடியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசி தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் முருகன் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை காலை பழைய பேருந்து நிலையம் வழியாக ரோந்து சென்றனா்.
அப்போது, அங்கு 2 போ் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த காஞ்சிபுரம் சாலையைச் சோ்ந்த கிதா்முகமது (65), பாலுடையாா் தெருவைச் சோ்ந்த பா்கான் (29) ஆகிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இதுகுறித்து 2 போ் மீதும் வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.