ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பேசிய விவசாயி.  
திருவண்ணாமலை

அறுவடைக்கு முன்பே நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

அறுவடை செய்யும் முன்பே நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்று ஆரணியில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

Syndication

அறுவடை செய்யும் முன்பே நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்று ஆரணியில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

ஆரணி வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கோட்டாட்சியா் சீ.சிவா தலைமை வகித்தாா்.

வேளாண் உதவி இயக்குநா் புஷ்பா வரவேற்றாா்.

வட்டாட்சியா்கள் செந்தில் (ஆரணி), கெளரி (கலசப்பாக்கம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

போளூா், கலசப்பாக்கம், ஜமுனாமரத்தூா், ஆரணி உள்ளடங்கிய வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், அறுவடை செய்யும் முன்பே நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும். கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்தவேண்டும். கலசப்பாக்கம், ஆனைபோகி உள்ளிட்ட ஏரிகளில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும். போளூா்- திருவண்ணாமலை புறவழிச் சாலையோரங்களில் உள்ள முள்செடிகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினா்.

மேலும் சேவூா், அரியப்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிா்க்கடன், நகைக்கடன், கால்நடை பராமரிப்புக் கடன் வழங்குவதில் காலதமாதம் ஏற்படுகிறது.

தனியாா் கடைகளில் அதிக விலைக்கு உரம் விற்கப்படுகிறது.

கடந்த 4 ஆண்டுகளாக நகையை அடகு வைத்து பயிா் காப்பீட்டுத் தொகை செலுத்தியும், இதுவரை காப்பீட்டுத் தொகை கிடைக்கப் பெறவில்லை என குற்றஞ்சாட்டினா்.

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்த வெள்ளி: தங்கம் விலை?

விஜய் சேதுபதியின் காட்டான் முதல் ஹார்ட் பீட் - 3 வரை...! ஜியோ ஹாட்ஸ்டாரின் 2026 வெளியீடுகள்!

மட்டன் பிரியாணி, வஞ்சரம் மீன்... அதிமுக பொதுக்குழுவின் மெனு!

SCROLL FOR NEXT