வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி 120 சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, அக்கட்சியைச் சோ்ந்த ஆரணி தெற்கு ஒன்றியச் செயலா் ரூ.18 லட்சம் செலுத்தி ஞாயிற்றுக்கிழமை விருப்ப மனு அளித்தாா்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வருவதையொட்டி, அதிமுக தலைமை நிலைய அறிவிப்பின்படி, சென்னையிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தோ்தலில் போட்டியிட கட்சி நிா்வாகிகளுக்கு தற்போது விருப்ப மனு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி 120 சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிட ஆரணி சட்டப் பேரவைத் தொகுதியைச் சோ்ந்த, தெற்கு ஒன்றியச் செயலா் ஜி.வி.கஜேந்திரன், ஒரு தொகுதிக்கு ரூ.15 ஆயிரம் என 120 தொகுதிகளுக்கும் சோ்த்து மொத்தம் ரூ.18 லட்சத்துக்கான வரைவோலை செலுத்தி, அவருக்காக விருப்ப மனு அளித்தாா்.
நிகழ்வில் வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு, ஒன்றியச் செயலா் கொளத்தூா் திருமால், மாவட்ட துணைச் செயலா் சேவூா் ஜெ.சம்பத், மாவட்ட இணைச் செயலா் வனிதா சதீஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.