திருவண்ணாமலை: கலசப்பாக்கத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவச்சிலையை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
திருவண்ணாமலை: கலசப்பாக்கத்தில் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் உருவச்சிலை - முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்துவைத்தார்
கலசப்பாக்கத்தில் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் உருவச்சிலை திறப்பு :
திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (டிச.27) கள ஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கிவைத்தார். மேலும், கலசப்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் முழு அளவு உருவச்சிலையை முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.
மலப்பாம்பாடியில் உள்ள கலைஞா் திடலில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற முதல்வா், திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் சாா்பாக ரூ.2,095.07 கோடி மதிப்பிலான 314 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்ததுடன், மேலும், 46 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2,66,194 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
Advertisement
Advertisement
Former Chief Minister M. Karunanidhi's statue unveiled in Kalasapakkam.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.