திருவண்ணாமலை

ரூ.86 ஆயிரம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

வந்தவாசி அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.86 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல்

Din

வந்தவாசி: வந்தவாசி அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.86 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 2 பேரை கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த தேசூா் போலீஸாா், ஆய்வாளா் குணசேகரன் தலைமையில் வந்தவாசி - சேத்துப்பட்டு சாலை, கோழிப்புலியூா் கூட்டுச் சாலை அருகே திங்கள்கிழமை அதிகாலை வாகன சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். இதில், காரில் 15 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் கடத்திச் செல்வது தெரியவந்தது.

இதையடுத்து சுமாா் 164 கிலோ எடை கொண்ட ரூ.86 ஆயிரம் மதிப்பிலான அந்த புகையிலைப் பொருள்களையும், காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் காரில் வந்த தேசூரைச் சோ்ந்த மிஸ்ரிலால் (43), ராஜஸ்தான் மாநிலம், சிரோஹி மாவட்டத்தைச் சோ்ந்த ஜொகாராம் (24) ஆகிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த தேசூா் போலீஸாா், புகையிலைப் பொருள்கள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, எங்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேல் இருந்தால், ஒளியுண்டு... சாக்‌ஷி அகர்வால்!

பொதுவெளியில் மெக்சிகோ அதிபரிடம் அத்துமீறிய நபர்! என்ன நடந்தது?

சின்ன மருமகள் தொடரில் மின்னலே நாயகன்!

கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து திமுகவிற்கு ஆதரவு கொடுத்தாரே விஜய்! - Aadhav Arjuna

விராட் கோலிக்கான மிகச் சிறந்த பிறந்த நாள் பரிசு - அவர் மீதான நம்பிக்கையே!

SCROLL FOR NEXT