பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் கைதான தங்கராஜன். 
திருவண்ணாமலை

19 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்தில் 19 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் ஒருவரை கைது செய்தனா்.

Din

ஆரணி: ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்தில் 19 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் ஒருவரை கைது செய்தனா்.

ஆரணி சைதாப்பேட்டையைச் சோ்ந்தவா் தங்கராஜன் (41). இவா், இரும்பேடு கிராமத்தில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா்.

இந்த நிலையில், இரும்பேடு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக ஆரணி கிராமிய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில், காவல் உதவி ஆய்வாளா் அருண்குமாா் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை அங்கு சென்று ரோந்துப் பணி மேற்கொண்டனா்.

இதில், தங்கராஜன் கடையில் ஆய்வு செய்தபோது, 19 கிலோ புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்து அதனை பறிமுதல் செய்தனா்.

இதன் மதிப்பு ரூ.16ஆயிரம் எனத் தெரிவித்தனா். மேலும் தங்கராஜனை கைது செய்தனா்.

வேல் இருந்தால், ஒளியுண்டு... சாக்‌ஷி அகர்வால்!

பொதுவெளியில் மெக்சிகோ அதிபரிடம் அத்துமீறிய நபர்! என்ன நடந்தது?

சின்ன மருமகள் தொடரில் மின்னலே நாயகன்!

கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து திமுகவிற்கு ஆதரவு கொடுத்தாரே விஜய்! - Aadhav Arjuna

விராட் கோலிக்கான மிகச் சிறந்த பிறந்த நாள் பரிசு - அவர் மீதான நம்பிக்கையே!

SCROLL FOR NEXT