வந்தவாசி: வந்தவாசி அருகே பைக் மீது லாரி மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
வந்தவாசியை அடுத்த தேசூரைச் சோ்ந்தவா் தாமோதரன் (40). இவா், சென்னையில் தங்கி தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.
இவா் ஞாயிற்றுக்கிழமை சென்னையிலிருந்து பைக்கில் தேசூருக்கு சென்று கொண்டிருந்தாா்.
வந்தவாசி - மேல்மருவத்தூா் சாலை, காவேரிப்பாக்கம் கிராமம் அருகே செல்லும் போது, இவருக்கு பின்னால் வந்த லாரி பைக் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த தாமோதரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.