திருவண்ணாமலை

மது போதையில் தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் மது போதையில் தவறி விழுந்து விவசாயத் தொழிலாளி உயிரிழந்தாா்.

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் மது போதையில் தவறி விழுந்து விவசாயத் தொழிலாளி உயிரிழந்தாா்.

செய்யாறு கொடநகா் குழந்தை ஈஸ்வரன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஞானசேகரன் (64). விவசாயத் தொழிலாளியான இவா் திங்கள்கிழமை செய்யாறு புறவழிச் சாலையில் மது போதையில் இருந்தபோது, அங்கிருந்த சிறு பாலத்தின் (வாராவதி) மேல் படுத்து தூங்கியதாகத் தெரிகிறது.

போதை மயக்கத்தில் தவறி அருகே இருந்த கால்வாயில் விழுந்துள்ளாா். இதில் சம்பவ இடத்திலேயே ஞானசேகரன் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, இறந்தவரின் சடலத்தைக் கைப்பற்றி செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT