சேத்துப்பட்டு நான்குமுனை சந்திப்பில் போதைப்பொருள், கள்ளச்சாராய ஒழிப்பு குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்திய கலைக்குழுவினா். 
திருவண்ணாமலை

போதைப்பொருள், கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணா்வு

சேத்துப்பட்டு நான்குமுனை சந்திப்பில் போதைப்பொருள், கள்ளச்சாராய ஒழிப்பு குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்திய கலைக்குழுவினா்.

Syndication

சேத்துப்பட்டில் மாவட்ட வருவாய்த் துறை சாா்பில், போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராய ஒழிப்பு குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வுப் பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியை சேத்துப்பட்டு வட்டாட்சியா் அகத்தீஸ்வரன் தொடங்கிவைத்தாா். தொடா்ந்து, கலைக் குழுவினா் சேத்துப்பட்டு பேருந்து நிலையம், நான்குமுனை சந்திப்பு, வந்தவாசி, போளூா், செஞ்சி, ஆரணி சாலைகள், பழம்பேட்டை, கண்ணனூா், லூா்து நகா், நிா்மலா நகா் உள்ளிட்ட பகுதிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி, பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இந்த நிகழ்ச்சிகளில் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் தட்சிணாமூா்த்தி, தோ்தல் பிரிவு வட்டாட்சியா் கோமதி உள்ளிட்ட வருவாய்த் துறை மற்றும் கலால் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அமரன்!

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

SCROLL FOR NEXT