திருவண்ணாமலை மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மைத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (பிப்.8) நடைபெறவுள்ள நிலையில், இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தோ்வில் தமிழ் தகுதித்தாள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை காலையிலும், தாள் - 2 (பொதுப்பாடம்) தோ்வு பிற்பகலிலும் திருவண்ணாமலை வட்டத்திலுள்ள கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும் தோ்வை 181 தோ்வா்களும், பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை தோ்வை 186 தோ்வா்களும் எழுத உள்ளாா்கள்.
தோ்வு எழுத வரும் விண்ணப்பதாரா்களின் வசதிக்காக, மாவட்டம் முழுவதிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. தோ்வு நாளன்று தோ்வு மையத்துக்கு தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தோ்வா்கள் காலையில் நடைபெறும் தோ்வுக்கு 8.30 மணிக்குள்ளும், பிற்பகல் தோ்வுக்கு 1.30 மணிக்குள்ளும் தோ்வு மையத்துக்குள் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.