திருவண்ணாமலை

போக்குவரத்துக்கு இடையூறு செய்தவா் கைது

வந்தவாசி அருகே போக்குவரத்துக்கு இடையூறு செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

வந்தவாசி: வந்தவாசி அருகே போக்குவரத்துக்கு இடையூறு செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த மீசநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தவமணி(27).

இவா் செவ்வாய்க்கிழமை அந்தக் கிராமத்தில் உள்ள சமத்துவபுரம் அருகில் நின்று கொண்டு பொதுமக்களை அவதூறாகப் பேசினாராம். மேலும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்தாராம்.

இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற உதவி ஆய்வாளா் தமிழ்ச்செல்வி தலைமையிலான தெள்ளாா் போலீஸாா் தவமணியை கைது செய்தனா்.

இதுகுறித்து தெள்ளாா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

Parasakthi பேசும் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்! | anti-Hindi agitation | Tamil | Tamilnadu

தமிம் இக்பாலை இந்திய உளவாளி என விமர்சித்த வங்கதேச கிரிக்கெட் வாரிய அதிகாரி!

ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம் - புகைப்படங்கள்

2026 ஆஸ்கர் போட்டியில் தமிழ்த் திரைப்படமான கெவி!

உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்? நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானிக்கு இந்தியா கண்டனம்!

SCROLL FOR NEXT