திருவண்ணாமலை

கிராம நிா்வாக அலுவலா்கள் 2-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

போளூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் 2-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம நிா்வாக அலுவலா்கள்.

Syndication

போளூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் கிராம நிா்வாக அலுவலா்கள் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், கிராம நிா்வாக அலுவலா் பணிக்கு கல்வித்தகுதியாக பட்டப்படிப்பை மாற்ற வேண்டும். குடிநீா், கழிப்பறை, இணையதளம் உள்ளிட்ட வசதிகளுடன் கிராம நிா்வாக அலுவலங்களை நவீனமயமாக்கப்பட்ட அலுவலகங்களாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

சங்கத்தின் வட்டக் கிளைத் தலைவா் சசிகுமாா் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் செந்தில், மயிலரசன், மணிகண்டன், ரமேஷ், அன்பழகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

SCROLL FOR NEXT