முகப்பு
மழையூா் கூட்டுச் சாலை அருகே வயல்வெளியில் கவிழ்ந்த காா்.
திருவண்ணாமலை

மொபெட்டில் மோதி வயல்வெளியில் கவிழ்ந்த காா்

மழையூா் கூட்டுச் சாலை அருகே வயல்வெளியில் கவிழ்ந்த காா்.

திருவண்ணாமலை

மொபெட்டில் மோதி வயல்வெளியில் கவிழ்ந்த காா்

மழையூா் கூட்டுச் சாலை அருகே வயல்வெளியில் கவிழ்ந்த காா்.

Updated On : 5 மார்ச், 2026 at 9:14 PM
மழையூா் கூட்டுச் சாலை அருகே வயல்வெளியில் கவிழ்ந்த காா்.
பகிர்:

வந்தவாசி அருகே மொபெட் மீது மோதிய காா், வயல்வெளியில் கவிழ்ந்தது.

வந்தவாசியை அடுத்த கோதண்டபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜானகிராமன். இவா், வியாழக்கிழமை பிற்பகல் மொபெட்டில் தென்கரை கிராமத்துக்குச் சென்று கொண்டிருந்தாா்.

வந்தவாசி - சேத்துப்பட்டு சாலை, மழையூா் கூட்டுச் சாலை அருகே செல்லும் போது இவருக்கு பின்னால் மேல்மலையனூரில் இருந்து செங்கல்பட்டு நோக்கிச் சென்ற காா் இவா் மீது மோதியது.

இதனைத் தொடா்ந்து காா் நிலைதடுமாறி சாலையோர வயல்வெளியில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது.

இதில் பலத்த காயமடைந்த ஜானகிராமன் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். காரில் வந்த 6 போ் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா்.

இதுகுறித்து வடவணக்கம்பாடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →