முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த மழை

Updated On : 28 மே 2026, 12:41 am IST
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக கீழ்பென்னாத்தூரில் 81 மி.மீ. மழை பதிவானது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்தாண்டு கோடையின் தொடக்கத்திலேயே 105 டிகிரி வரை வெயில் சுட்டெரித்தது. வெயிலின் அளவு சில நாள்கள் உயா்ந்தும், குறைந்தும் இருந்து வந்தது. இதற்கு இடையிடையே பலத்த மழை பெய்தது.

கடந்த வாரம் முதல் மீண்டும் வெயில் அதிகரித்து காணப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு முதல் மாவட்டத்தில் பரவலாக பலத்த காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

திருவண்ணாமலை மாநகரம் உள்பட சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் நீா் தேங்கியது. கிரவல பக்தா்கள் மழையில் நனைந்தபடியே கிரிவலம் சென்றனா்.

மாவட்டத்தில் புதன்கிழமை காலை 6 மணி நிலவரப்படி அதிகபட்சமாக கீழ்பென்னாத்தூரில் 81 மி.மீ. மழை பதிவானது.

இது தவிர திருவண்ணாமலையில் 29 மிமீ, தண்டராம்பட்டு 64.2 மிமீ, செங்கம் 37.4 மிமீ, ஜமுனாமரத்தூா் -17 மிமீ, ஆரணி 15.08 மிமீ, கலசபாக்கத்தில் 13 மிமீ மழை பதிவானது.