வேலூர்

அம்மூர் காப்புக்காட்டில் மர்ம நபர்கள் தீ வைப்பு

DIN

அம்மூர் காப்புக்காட்டு மலைப் பகுதியில் மர்ம நபர்கள் அவ்வப்போது, தீ வைத்து வருகின்றனர். இதனால், அரியவகை செம்மரங்கள், அழிவின் விளிம்பின் உள்ள மான் உள்ளிட்டவற்றின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
ராணிப்பேட்டையில் உள்ள ஆற்காடு வனச்சரக அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் அம்மூர், பானாவரம், மகிமண்டலம், வன்னிவேடு, புங்கனூர் ஆகிய காப்புக் காடுகள் உள்ளன. இந்த காப்புக்காடுகள் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட பசுமைக் காடுகளாகும்.
இப்பகுதிகளில் விலைமதிப்புமிக்க அரிய வகை மரங்களான செம்மரம், ஆச்சால், கருங்காலி, வெல்வேலன் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு, வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
சுமார் 2,273 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட அம்மூர் காப்புக்காட்டில் அழிவின் விளிம்பில் உள்ள புள்ளி மான்கள் விடப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன.  
இந்நிலையில், அம்மூர் காப்புக்காட்டுக்கு மத்தியில் அமைந்துள்ள மலைக்கு மர்ம நபர்கள் ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் தீ வைத்தனர். இதில், மலை முழுவதும் உள்ள மஞ்சம் புல்லில் தீ பரவி, கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது.
இதனால், காப்புக் காடுகளில் உள்ள அரிய வகை மரங்களும், மான் உள்ளிட்ட வன விலங்குகளின் பாதுகாப்பும் கேள்விக் குறியாகியுள்ளது. எனவே, காடுகளில் மர்ம நபர்கள் தீ வைக்கும் சம்பவங்களை தடுத்து நிறுத்த மாவட்ட வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 9-இல் விஜயகாந்துக்கு பத்மபூஷண் விருது: பிரேமலதா

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ வாராகி அம்மன்...

ஆழ்வாா்கள் தமிழரங்கம் ஆறாம் ஆண்டு விழா

மாட்டுக் கொட்டகை எரிந்து சேதம்

முஸ்லிம்கள் ஹஜ் பயணத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி: ஆந்திரத்தில் பாஜக கூட்டணி வாக்குறுதி

SCROLL FOR NEXT