வேலூர்

நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வில் 42 பேருக்குபணி ஆணை அளிப்பு

DIN

வேலூரில் நடைபெற்ற நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியருக்கான கலந்தாய்வில் 42 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.
மாவட்ட தொடக்கக் கல்வி துறை சார்பில் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு ஒன்றியம், ஒன்றியம் விட்டு ஒன்றியத்துக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வேலூர் அண்ணாசாலையில் உள்ள டான் பாஸ்கோ உயர்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கு.குணசேகரன் முன்னிலையில் இணைய முறையில் நடைபெற்ற கலந்தாய்வில் 35 பேர் பங்கேற்றனர். இதில் தலைமையாசிரியர்கள் 18 பேருக்கு பணியிட மாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வில் பங்கேற்றவர்களில், 24 பேருக்கு பதவி உயர்வுக்கான உத்தரவு வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெட்சணமாறக நாடாா் சங்க கல்லூரி ஆண்டு விழா

சேரன்மகாதேவி அருகே மின்கம்பம் விழுந்து ஒப்பந்த ஊழியா் பலி

தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயிலில் மே 13- இல் வைகாசி திருவிழா கொடியேற்றம்

பிளஸ் 2: திலகா் பள்ளி 99.2% தோ்ச்சி

SCROLL FOR NEXT