வேலூர்

பைக் திருடிய நபர் கைது

DIN

திருப்பத்தூர் அருகே பைக் திருடிய நபரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
திருப்பத்தூரை அடுத்த கதிரிமங்கலத்தில் வசிப்பவர் விஜயகுமார் (35). இவர், செவ்வாய்க்கிழமை சி.கே.ஆசிரமம் பகுதியில் உள்ள கடைக்கு வெளியே தனது பைக்கை நிறுத்திச் சென்றார்.
அப்போது, மர்ம நபர் ஒருவர் விஜயகுமாரின் பைக்கின் பூட்டை உடைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள் அவரைப் பிடித்து சரமாரியாகத் தாக்கினர். தகவலறிந்த திருப்பத்தூர் கிராமிய போலீஸார் அங்கு சென்று மர்ம நபரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர், சின்னகண்ணாலப்பட்டியைச் சேர்ந்த கலைவாணன் (41) என்பதும், இவர் பல இடங்களில் பைக்குகளை திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்து, திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

SCROLL FOR NEXT