ஆம்பூர் அருகே துத்திப்பட்டு பிந்துமாதவர் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை திருப்பதியில் ஒரு நாள் தரிசனம் மற்றும் நவ திருப்பதி தரிசனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
புரட்டாசி 3-ஆம் சனிக்கிழமை விழாவையொட்டி, திருப்பதி வெங்கடாசலபதி, நவ திருப்பதி பெருமாள்களின் உற்சவர் சிலைகள் பக்தர்களின் தரிசனத்துக்காக பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
மேலும், பிந்துமாதவர் பெருமாள் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. மூலவருக்கு பூரண புஷ்ப கலை அலங்காரத்துடன், நவரத்தின அங்கி சேவையும் நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை மகாவிஷ்ணு சேவை அறக்கட்டளையினர் செய்துள்ளனர்.