திமுக பிரமுகர் கொலை முயற்சி வழக்கில் மேலும் ஒருவர் கைது
காட்பாடி அருகே திமுக பிரமுகர் கொலை முயற்சி வழக்கில் மேலும் ஒருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
காட்பாடி அருகே திமுக பிரமுகர் கொலை முயற்சி வழக்கில் மேலும் ஒருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
காட்பாடி அருகே விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் திமுக பிரமுகர் சீனிவாசன். இவரிடம் அஜீத் என்பவர் பணிபுரிந்து வருகிறார். அஜீத்தை அதே பகுதியை சேர்ந்த சுனில்குமார் என்பவர் தகராறின்போது தாக்கியுள்ளார். இதனை சீனிவாசன் தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சுனில்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் சேர்ந்து சீனிவாசனை அண்மையில் ஓட ஓட விரட்டிச் சென்று அரிவாளால் தாக்கினர்.
அதில் பலத்த காயமடைந்த சீனிவாசன், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக விருதம்பட்டு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில் செந்தில்குமார் என்பவரை கைது செய்தனர்.
மகேஷ் என்பவர் ஆரணி நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்நிலையில், விருதம்பட்டு போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், விருதம்பட்டு பாலாற்றுப் பகுதியில் பதுங்கியிருந்த சுனில்குமாரை போலீஸார் கைது செய்தனர்.