இன்று பிஎஸ்என்எல் சிறப்பு முகாம்
பிஎஸ்என்எல் சார்பாக ஆம்பூர் பகுதியில் வெள்ளிக்கிழமை (மார்ச் 30) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
பிஎஸ்என்எல் சார்பாக ஆம்பூர் பகுதியில் வெள்ளிக்கிழமை (மார்ச் 30) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
ஆம்பூர் பேருந்து நிலையம், மோட்டுக்கொல்லை பகுதி, மாதனூரில் பேருந்து நிறுத்தம் ஆகிய 3 பகுதிகளில் காலை 8 முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இம்முகாமில் பிஎஸ்என்எல் புதிய சிம்கார்டு திட்டங்கள் குறித்த அறிமுகமும், விளக்கமும் அளிக்கப்படும். தரைவழி இணைப்பு, சிம்கார்டு விற்பனை, பிராட்பேண்ட் இணைப்பு விற்பனை ஆகியவை நடைபெற உள்ளது.