வேலூர்

கணவர் கொலை: மனைவி கைது

தினமணி

பேர்ணாம்பட்டு அருகே கணவனைக் கத்தியால் குத்திக் கொன்ற மனைவியை போலீஸார் கைது செய்தனர்.
 பேர்ணாம்பட்டை அடுத்த எம்.வி.குப்பத்தைச் சேர்ந்தவர் வெல்டிங் தொழிலாளி செந்தில்குமார் (30)(படம்). இவரது மனைவி ரேவதி (25). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். செந்தில்குமார் சில மாதங்களாக மனநிலை சரியில்லாமல் இருந்தாராம். அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், ஞயிற்றுக்கிழமை தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. அப்போது வீட்டில் இருந்த பேனா கத்தியால் செந்தில்குமாரை ரேவதி குத்தினாராம். இதில் காயமடைந்த செந்தில்குமார் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், செந்தில்குமார் ஏற்கெனவே இறந்து விட்டாகத் தெரிவித்தனர்.
 இதுதொடர்பாக மேல்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து, ரேவதியை கைது செய்தனர். அவரிடம் டிஎஸ்பி எம்.பிரகாஷ்பாபு விசாரணை நடத்தி வருகிறார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

SCROLL FOR NEXT