தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள கவரப்பட்டு கிராமத்தில் பெரியார் சிலை அவமரியாதை செய்யப்பட்டதைக் கண்டித்து ஆற்காடு பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்சியின் நகர செயலாளர் பாக்கியராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலாளர் சார்லஸ், நிர்வாகிகள் சின்னையன், கானாகவி உள்பட கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.