வேலூர்

தொழிலதிபர் வீடுகளில் வருமான வரித் துறையினர் சோதனை

DIN

அரக்கோணத்தில் தொழிலதிபர் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை செய்தனர்.
அரக்கோணம் மின்னல் ஊராட்சிக்கு உள்பட்ட நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விசைத்தறி தொழிலதிபர் தீனதயாளன். இவருக்குச் சொந்தமாக வி.ஆர்வி. மில்ஸ் உள்ளது. 
இந்நிலையில் வேலூர், சென்னையில் இருந்து 15-க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள் தீனதயாளனின் வீடு, அலுவலகம் மற்றும் கிடங்கில் சனிக்கிழமை சோதனை செய்தனர்.
மேலும், இவரது உறவினர்கள் 2 பேரின் வீடுகளிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
திருப்பத்தூரில்...
திருப்பத்தூர், ஏப். 13: திருப்பத்தூர் அருகே தொழிலதிபர் வீட்டில் வருமான வரித் துறையினர் சனிக்கிழமை சோதனை நடத்தினர்.
கொரட்டி பகுதியைச் சேர்ந்த கண்ணன் (60). தொழிலதிபரான இவரது வீட்டில் வருமான வரித் துறையினர் சனிக்கிழமை சோதனை நடத்தினர். இச்சோதனையில் தேர்தல் பறக்கும் படையினரும் உடனிருந்தனர்.  திருப்பத்தூர் கிராமிய காவல் ஆய்வாளர் மதனலோகன் தலைமையிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

தாயின் சடலத்தை தண்ணீா் தொட்டியில் புதைத்த இளைஞா்: போலீஸ் விசாரணை

SCROLL FOR NEXT