வாணியம்பாடி: உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளதால் தோ்தல் நடத்தை விதிகளையொட்டி வாணியம்பாடி சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தை அதிகாரிகள் சீல் வைத்து மூடினா் (படம்).
தமிழ்நாட்டில் வரும் 27, 30-ஆம் தேதிகளில் இரு கட்டமாக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுவதால் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து, வாணியம்பாடி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலத்தை பொதுப் பணித் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மாலையில் சீல் வைத்துப் பூட்டினா். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்த அனைத்துக் கட்சி கொடிக் கம்பங்களையும் அகற்றினா்.