பைக்கிலிருந்து கீழே விழுந்து கிராம உதவியாளர் சாவு
ஆற்காடு அருகே பைக்கிலிருந்து கீழே விழுந்து கிராம உதவியாளர் உயிரிழந்தார்.
ஆற்காடு அருகே பைக்கிலிருந்து கீழே விழுந்து கிராம உதவியாளர் உயிரிழந்தார்.
திமிரியை அடுத்த கனியனூர் பகுதியைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன் (43). இவர், கீழ்பாடி கிராமத்தில் கிராம உதவியாளராக வேலை செய்து வந்தார். திங்கள்கிழமை இரவு கீழ்பாடி இணைப்புச் சாலையில் சென்றபோது, பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந் தார். இதில் கமலக்கண்ணன் பலத்த காயமடைந்து இறந்தார்.
இதுகுறித்து திமிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.