ஆம்பூர் அருகே வழித்தவறி வந்த மான் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது .
ஆம்பூர் அருகே வடபுதுப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே காட்டிலிருந்து வழித்தவறி புள்ளி மான் வந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் மானைப் பிடித்து வைத்து ஆம்பூர் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சென்ற வனத் துறையினரிடம் பொதுமக்கள் மானை ஒப்படைத்தனர். வனத் துறையினர் அதை காட்டில் விட்டனர்.